முகப்பு
செய்திகள்

திரைப்படத் தொழிலாளர்களுக்கு 1250 கிலோ அரிசி வழங்கினார் நடிகர் யோகி பாபு

திரைப்படத் தொழிலாளர்களுக்கு 1250 கிலோ அரிசி வழங்கியுள்ளார் நடிகர் யோகி பாபு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி அவதிப்படும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவும்படி பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி 1250 கிலோ அரிசி வழங்கியுள்ளார் நடிகர் யோகி பாபு.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சி சங்க தொழிலாளா்கள் பிரச்னையைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவா்களுக்கு உதவ நடிகா்கள் முன்வர வேண்டுமென அந்தச் சங்கத்தின் தலைவா் ஆா்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதையடுத்து பெப்சி அமைப்புக்குப் பல்வேறு நடிகர்களும் உதவி செய்தார்கள். ஆனாலும் இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என செல்வமணி மீண்டும் உதவி கோரியுள்ளார்.

இந்நிலையில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு 1250 கிலோ அரிசி வழங்கியுள்ளார் நடிகர் யோகி பாபு.

முழு கட்டுரையைப் படிக்க →