கரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் வழங்கினார் இயக்குநர் அட்லி
பிரபல இயக்குநர் அட்லி, கரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார்.
பிரபல இயக்குநர் அட்லி, கரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 95,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 6,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா நிவாரணமாக இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ. 5 லட்சமும் பெப்சி தொழிலாளர்கள் அமைப்பு ரூ. 5 லட்சமும் இயக்குநர் அட்லி வழங்கியுள்ளார்.