முகப்பு
செய்திகள்

ஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் இரு படங்கள்!

ஒரே நாளில் ஒரு கதாநாயகனின் இரு படங்கள் வெளியாவது அதிசயமாகவே நடக்கும்.

Updated On : 20 ஜனவரி, 2020 at 11:37 AM
பகிர்:

ஒரே நாளில் ஒரு கதாநாயகனின் இரு படங்கள் வெளியாவது அதிசயமாகவே நடக்கும்.

ஆனால் வரும் ஜனவரி 31 அன்று சந்தானம் கதாநாயகனாக நடித்த இரு படங்கள் வெளிவரவுள்ளன. 

சந்தானம் நடிப்பில் உருவாகி நீண்ட நாளாக வெளியீட்டுக்குக் காத்திருக்கும் சர்வர் சுந்தரம் படம் ஜனவரி 31 அன்று வெளியாகவுள்ளது. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வைபவி ஷந்திலியா கதாநாயகியாக நடித்துள்ளார். மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்கள். கதை எழுதி இப்படத்தை இயக்கியவர், ஆனந்த் பால்கி. பி.கே.வர்மா ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

Advertisement

2018 ஜூலை மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளிவருகிறது. 

பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த், சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள டகால்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கதாநாயகி - ரித்திகா சென், இசை - விஜய் நரைன். இந்தப் படமும் ஜனவரி 31 அன்று வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக நடிகர் சந்தானம் உள்ளார். 

இதனால் இவ்விரு படங்களின் விவகாரம், தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் சென்றது. இரு படங்களும் வெவ்வேறு தேதிகள் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்திய பிறகு இரு தயாரிப்பாளர்களும் தங்கள் முடிவுகளில் உறுதியாக இருந்ததால் ஒரே நாளில் சந்தானத்தின் இரு படங்கள் வெளியாவதைத் தடுக்க முடியாமல் போய்விட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.