செய்திகள்

சமூகவலைத்தளங்களில் வெளியான விஜய் மகனின் சமீபத்திய புகைப்படம்

DIN

விஜய் மகன் சஞ்சயின் சமீபத்திய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவிவருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது. இந்தியாவிலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திரைப்பட மேற்படிப்பு தொடர்பாக கனடாவில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சஞ்சயால் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவில் கரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதால் சஞ்சய் அங்குப் பாதுகாப்பாக உள்ளார்.

இந்நிலையில் சஞ்சயின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தனது கல்லூரி நண்பர்களுடன் சஞ்சய் எடுத்துக்கொண்ட அந்தப் புகைப்படத்தை விஜய்யின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT