விஜய் மகன் சஞ்சயின் சமீபத்திய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவிவருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது. இந்தியாவிலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திரைப்பட மேற்படிப்பு தொடர்பாக கனடாவில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சஞ்சயால் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவில் கரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதால் சஞ்சய் அங்குப் பாதுகாப்பாக உள்ளார்.
இந்நிலையில் சஞ்சயின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தனது கல்லூரி நண்பர்களுடன் சஞ்சய் எடுத்துக்கொண்ட அந்தப் புகைப்படத்தை விஜய்யின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.