செய்திகள்

ஜூன் 19 முதல் சின்னத்திரை படப்பிடிப்பு, சினிமா போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நிறுத்தம்!

DIN

சென்னை: வரும் ஜூன் 19 முதல் சின்னத்திரை படபிடிப்புகளையும், சினிமாவுக்கான போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளையும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவி வரும் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக முடங்கியிருந்த சின்னத்திரை படபிடிப்புகளையும்,  சினிமாவுக்கான போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளையும் மீண்டும் துவங்க கடந்த மாதம்தான் கடுமையான நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.

தற்போது கரோனா பரவும் வேகம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கடுமையாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த நான்கு மாவட்டங்களிலும் வரும் ஜூன் 19 முதல் முழுமையான ஊரடங்கை தமிழக அரசு திங்களன்று அறிவித்தது.

இதையடுத்து வரும் ஜூன் 19 முதல் சின்னத்திரை படபிடிப்புகளையும், சினிமாவுக்கான போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளையும் நிறுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு முழு முடக்கத்தை அறிவித்துள்ளதால் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

மூலைக்கரைப்பட்டியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நிறுவன தினம்...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

SCROLL FOR NEXT