முகப்பு
செய்திகள்

இந்தியா முழுக்க இன்று எந்தவொரு படமும் வெளியாகவில்லை! படப்பிடிப்புகளும் ரத்து!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுக்க திரையுலகம் முடங்கியுள்ளது. 

Updated On : 20 மார்ச், 2020 at 11:49 AM
பகிர்:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுக்க திரையுலகம் முடங்கியுள்ளது. 

இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால், இன்று ஹிந்தி, தமிழ் என எந்தவொரு மொழிப்படமும் இந்தியாவில் வெளியாகவில்லை. 

மேலும் மார்ச் 19 முதல் 31 வரை இந்தியாவில் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஒட்டுமொத்த திரையுலமும் முடங்கியுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டிலும் திரையரங்குகள் மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளதால் இந்த வாரம் எந்தவொரு தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. 2018-ல் தமிழ்த் திரையுலகில் நிகழ்ந்த வேலை நிறுத்தம் காரணமாக பல வாரங்கள் புதிய படங்கள் வெளியாகாமல் இருந்தன. 2015 வெள்ளத்தின்போதும் சென்னையில் திரையரங்குகள் இயங்கவில்லை. இந்நிலையில் இந்த வருடம் கரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகமும் முடங்கியுள்ளது. மார்ச் 31-க்குப் பிறகு தான் புதிய படங்கள் வெளிவருவது குறித்த தகவல்கள் வெளியாகும். 

இந்தியாவில் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 5-ஆக உயா்ந்தது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை206 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.