ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
'நவரத்னா' பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவி மேலாளர் பணியிடங்கள் குறித்து...
இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 'நவரத்னா' பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.: RG/08-10/26
பணி: Assistant Manager
Advertisement
Advertisement
பிரிவு: IT/Network & Security
காலியிடங்கள்: 2
பிரிவு: IT/Programming
காலியிடங்கள்: 2
பிரிவு: IT/Data Centre
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.40,000 -1,40,000
வயதுவரம்பு: 27.4.2026 தேதியின்படி 32-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியில் துறையில் Computer Engineering, Technology, Computer Science,Computer Applications,Information Technology, Electronics,Electronics & Telecommunications,Electronics & Communication,Electronics & Instrumentation பிரிவில் இளங்நிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, இடபுள்யுஎஸ் மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.600. எஸ்சி,எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.300. இதனை ஆன்லைன் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://frites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.4.2026
விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
RITES Ltd., a NavRatna Central Public Sector Enterprise under the Ministry of Railways, Govt. of India is a premier multi-disciplinary consultancy organization in the fields of transport, infrastructure and related technologies.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.