செய்திகள்

அசோக் செல்வனின் புதிய படம்

DIN

ஓ மை கடவுளே-க்குப் பிறகு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசோக் செல்வன்.

சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே படம் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் அசோக் செல்வனுக்கும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதன்மூலம் அவருடைய அடுத்த படங்களின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் அசோக் செல்வனின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்வாதினி என்கிற புதிய இயக்குநருடன் இணையவுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வனின் ஜோடியாக நிஹாரிகா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்கிற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படம் தவிர ரெட் ரம், நெஞ்சமெல்லாம் காதல் என மேலும் இரு படங்களில் நடிக்கிறார் அசோக் செல்வன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT