முகப்பு
செய்திகள்

கரோனாவால் உயிரிழந்த தமிழ் நடிகர்

2017-ல் வெளியான என்கிட்ட மோதாதே படத்தில் நடித்தவர் பிளோரண்ட் சி பெரேரா

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

கரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகரும் ஊடகத்தைச் சேர்ந்தவருமான பிளோரண்ட் சி பெரேரா உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 67.

2003-ல் வெளியான புதிய கீதை படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகராக அறிமுகமானார். சத்ரியன், வேலையில்லா பட்டதாரி 2, கயல் போன்ற படங்களில் நடித்துள்ளார். கலைஞர், வின், விஜய் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பிளோரண்ட் சி பெரேரா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளார். 

பிளோரண்ட் சி பெரேராவின் மறைவுக்குப் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →