செய்திகள்

கரோனாவால் உயிரிழந்த தமிழ் நடிகர்

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகரும் ஊடகத்தைச் சேர்ந்தவருமான பிளோரண்ட் சி பெரேரா உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 67.

2003-ல் வெளியான புதிய கீதை படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகராக அறிமுகமானார். சத்ரியன், வேலையில்லா பட்டதாரி 2, கயல் போன்ற படங்களில் நடித்துள்ளார். கலைஞர், வின், விஜய் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பிளோரண்ட் சி பெரேரா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளார். 

பிளோரண்ட் சி பெரேராவின் மறைவுக்குப் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT