செய்திகள்

உதவி ஆட்சியராக பயிற்சி பெறும் நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் - குவியும் பாராட்டு

நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய் குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற்று தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வருகிறார்.  

DIN

நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய் குடிமை பணி தேர்வில் வெற்றிபெற்று தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வருகிறார். 

90களில் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் கலக்கியவர் சின்னி ஜெயந்த். ரஜினிகாந்த், விஜய், அஜித், பிரஷாந்த் உள்ளிட்ட பல முன்னணி நாயகர்களின் படத்தில் நடித்துள்ளார். 

மேலும் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்திய குடிமைப் பணி தேர்வில் கலந்துகொண்டு, 75 வது ரேங்க் பெற்று வெற்றிபெற்றார். 

தற்போது அவர் தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 3 மாதங்களாக அவர் அங்கு பணிபுரிந்து வருகிறார். ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு சார் ஆட்சியராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. தற்போது மிக ஆர்வமாக தனது பணியை மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.88.20 ஆக நிறைவு!

ஆக்டோபஸ்! எட்டு கரங்களைக் கொண்டு என்ன செய்கிறது? ஆய்வில் அறிந்த அதிசயம்!

அதிசயம் உள்ளே... ஜான்வி!

சசிகலா, டிடிவி, செங்கோட்டையனுடன் விரைவில் நயினார் நாகேந்திரனை சந்திப்பேன் - OPS

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஸ்டாலின் உறுதிமொழி

SCROLL FOR NEXT