நடிகை நயன்தாரா நீண்ட இடைவேளைக்குப் பிறகு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்ததைத் தொடர்ந்து, அதன் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா கடந்த பல வருடங்களாகவே தான் நடிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாக்கள், விளம்பர நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வருகிறார். சமூக ஊடகங்களில்கூட அவருக்கு கணக்கு இல்லை. ரசிகர்களால் அவரை திரைப்படங்களில் மட்டும் காண முடியும் என்ற நிலையே இருந்து வருகிறது.
இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்கபதாகத் தகவல் வெளியானது.
அதற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகத் தெரிகிறது. நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் அவர் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களை அதிகளவில் பகிர, நயன்தாரா ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஆகஸ்ட் 13-ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.