நடிகர் கவுண்டமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சிவகார்த்திகேயன் பகிர, இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்களா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படம் ஓடிடியில் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டதால் இந்தப் படம் திரையரங்கிலேயே வெளியாகலாம் என்ற எதர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிக்க | அசத்தும் தமன்னா: அந்தூன் தெலுங்கு ரீமேக் டெய்லர் வெளியானது
சிவகார்த்திகேயன் தற்போது' டான் 'படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் பொள்ளாச்சி மற்றும் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதையும் படிக்க | பிரபல ஓடிடியில் வெளியாகிறது சாணிக் காயிதம்
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் கவுண்டமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, ''நடிகர் கவுண்டமணியுடன் ஒரு சந்திப்பு. எப்பொழுதும் நினைவில் நிற்கும் தருணம்.'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு நட்பு ரீதியிலான சந்திப்பா ? டான் படத்தில் கவுண்டமணி நடிக்கிறாரா ? என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன,