செய்திகள்

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் மறைவு

தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குநர் கே.எஸ். சேது மாதவன் காலமானார். அவருக்கு வயது 90. 

DIN


தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குநர் கே.எஸ். சேது மாதவன் காலமானார். அவருக்கு வயது 90. 

ஓடையில் நின்னு, மறுபக்கம் உள்பட 60க்கும் மேற்பட்ட படங்களை சேது மாதவன் இயக்கியுள்ளார். ஏரளமான மலையாளப் படங்களை இயக்கியதோடு தமிழ், ஹிந்தி, தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். சிறந்த இயக்கத்துக்காக 4 விருதுகள் உள்படம் 10 தேசிய விருதுகளையும் 9 கேரள அரசின் விருதுகளையும் பெற்றார். 2010-ல் மலையாளத் திரையுலகின் பங்களிப்புக்காக கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருதைப் பெற்றார். 

1931-ல் பாலக்காட்டில் பிறந்த சேது மாதவன், கடந்த சில வருடங்களாக சென்னையில் வசித்து வந்தார். சேது மாதவன் இயக்கிய தமிழ்ப் படமான மறுபக்கம், 1991-ல் சிறந்த படமாகத் தேசிய விருது பெற்றது. இந்த விருதைப் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் பெற்றது. மலையாளத் திரையுலகில் கமல் ஹாசனை அறிமுகம் செய்த பெருமையும் அவருக்கு உண்டு. கடைசியாக 1995-ல் படம் இயக்கினார். 

சென்னையில் வசித்த வந்த கே.எஸ். சேது மாதவன், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு மனைவியும் இரு மகன்கள், ஒரு மகள் உள்ளார்கள். சேது மாதவனின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT