செய்திகள்

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: தமிழக அரசு ரூ. 75 லட்சம் நிதியுதவி

இந்த விழாவுக்குத் தமிழக அரசு ஆண்டு தோறும் நிதி வழங்கி வருகிறது.

DIN

சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்குத் தமிழக அரசு ரூ. 75 லட்சம் நிதியுதவி அளிக்கவுள்ளது. 

18-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா பிப்ரவரி 18 முதல் 25 வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பல முக்கியமான படங்கள் திரையிடப்பட உள்ளன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020  டிசம்பரில் நடைபெற வேண்டிய இந்த விழா இம்மாதம் நடைபெறுகிறது. 

இந்த விழாவுக்குத் தமிழக அரசு ஆண்டு தோறும் நிதி வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் சாா்பில் நடக்கும் சென்னை சா்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த வருடமும் தமிழக அரசு ரூ. 75 லட்சம் நிதி வழங்கியுள்ளது.

ரூ. 75 லட்சத்துக்கான காசோலையை இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவின் இயக்குநருமான திரு.ஏ.தங்கராஜிடம் தமிழக முதல்வா் பழனிசாமி வழங்கியுள்ளார். 

மேலும், செங்கல்பட்டு - பையனூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்திற்கு அருகில், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா படப்பிடிப்புத் தளம் அமைக்க தமிழக அரசின் சார்பில் ரூ. 3.50 கோடிக்கான காசோலையைத் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் முதல்வர் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

SCROLL FOR NEXT