ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் தமிழக வீரர்களுடன் உரையாடிய கமல் ஹாசன் (விடியோ)
தமிழ் வீரமே வாகையே சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும்...
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவின் 22 மாநிலங்களைச் சேர்ந்த 119 போ் பங்கேற்கிறார்கள். இவர்களில் 67 வீரர்களும் 52 வீராங்கனைகளும் உள்ளார்கள். 18 விளையாட்டுகளில் 85 பதக்கங்கள் கொண்ட போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. ஜூலை 17 அன்று இந்தியக் குழுவினரின் முதல் அணி டோக்கியோவுக்குப் புறப்படுகிறது. அதில் 90 பேர் அடங்கிய வீரர்களும் அதிகாரிகளும் செல்வார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் நேத்ரா குமணன், வருண் ஏ. தக்கார், கே.சி. கணபதி, ஜி. சத்யன், ஷரத் கமல், சி.ஏ. பவானி தேவி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், எஸ். தனலட்சுமி, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி என 11 தமிழக வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களிடம் இணையம் வழியாக நடிகர் கமல் ஹாசன் உரையாடினார். இதுபற்றி ட்விட்டரில் கமல் கூறியதாவது:
Advertisement
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகையே சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும் என்று கூறியுள்ளார்.
ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களுடன் நடிகர் கமல் ஹாசன் இணையம் வழியாக உரையாடியதன் 7 நிமிட விடியோ, மக்கள் நீதி மய்யம் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.