மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற பழம்பெரும் நடிகை காலமானார்
பழம்பெரும் நடிகை சுரேகா சிக்ரி, மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
பழம்பெரும் நடிகை சுரேகா சிக்ரி, மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
1978-ல் திரைப்பட நடிகையாக அறிமுகம் ஆனவர் சுரேகா சிக்ரி. ஏராளமான ஹிந்தி மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த சுரேகா, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். 1988-ல் தமாஸ், 1995-ல் மம்மோ, 2019-ல் பதாய் ஹோ ஆகிய படங்களுக்காக அவருக்குத் தேசிய விருதுகள் கிடைத்தன. கடைசியாக அவர் நடிப்பில் கோஸ்ட் ஸ்டோரீஸ் என்கிற படம் கடந்த வருடம் வெளிவந்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுரேகா சிக்ரி, மாரடைப்பால் இன்று காலமானார். சுரேகாவின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.