முகப்பு
செய்திகள்

'ஜெய் பீம்' படத்தால் விக்ரம் பிரபு படத்துக்கு உருவாகும் எதிர்பார்ப்பு - ஏன் தெரியுமா ?

ஜெய் பீம் படத்தினால் விக்ரம் பிரபு படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:30 AM
பகிர்:


சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் இன்று (நவம்பர் 2) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையில் அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. 

இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக மிரட்டலான நடிப்பை வழங்கியிருப்பவர் தமிழ். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். அசுரன் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். 

அடிப்படையில் இயக்குநரான தமிழ், விக்ரம் பிரபு நடித்துள்ள டாணாக்காரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். காவலர் பயிற்சியின் போது நடக்கும் கொடுமைகளை இந்தப் படம் பேசும் என கூறப்படுகிறது.

இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஜெய் பீம் படத்தில் தமிழின் வேடம் வரவேற்பைப் பெற்று வருவதால் அவர் இயக்கிய டானாக்காரன் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →