’எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு 
செய்திகள்

’எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

DIN

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்திற்கு பின் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் ’ஜெய்பீம்’மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் அடுத்தாண்டு(2022) பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என  தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் பிரியங்கா அருள் மோகன் , சத்யராஜ் , வினய் ,சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கல்குவாரியை மூட வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து அதிமுகவினா் பிரசாரம்

காளையால் சேதமடைந்த வாகனத்தை சரிசெய்துதரக் கோரி தகராறு

நாம் இந்தியா் கட்சிக்கு ஸ்பேனா் சின்னம்!

SCROLL FOR NEXT