செய்திகள்

சமந்தாவின் புதிய படம் குறித்து அதிரடி அறிவிப்பு : வெளியான புகைப்படம்: பிரபலங்கள் வாழ்த்து

DIN

சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்துள்ளார். 

நாக சைதன்யாவை பிரியவிருப்பதாக நடிகை சமந்தா சமீபத்தில் அறிவித்தார். இதனையடுத்து இருவரது பிரிவுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் நடிகை சமந்தா, விவாகரத்து என்பது வலி நிறைந்தது. என்னை அதில் இருந்து தனியாக மீண்டு வர அனுமதியுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கைதி, தீரன் அதிகாரம் ஒன்று என்ஜிகே ஆகிய படங்களைத் தயாரித்த டிரீம் வாரியர் பிக்சர்ஸின் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படத்தில் சமந்தா நடிக்கவிருக்கிறார். 

தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சாந்த ரூபன் எழுதி, இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவகாரத்து பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர இந்தப் படம் சமந்தாவுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இதனையடுத்து மாளவிகா மோகனன், உமா ரியாஷ்கான் உள்ளிட்டோர் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT