செய்திகள்

’குருப்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

DIN

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான குருப் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்திருக்கிறது.

நடிகர் துல்கர் சல்மான் தமிழ் , மலையாளப் மொழிகளில் மிக கவனமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். கடைசியாக அவர் நடித்து தமிழில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது அவர் அடுத்த படமாக ‘குருப்’ திரையரங்குகளில் வரும் நவம்பர்-12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கேரளாவில் புகழ்பெற்ற குற்றாளிகளில் ஒருவரான சுகுமாரா குருப்பின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டட்டிருக்கிறது.

துல்கர் தயாரித்த இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, டொவினோ தாமஸ், ஷிவஜித், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT