செய்திகள்

''ச்சீ என்றார்கள்'' - தன் படத்துக்கு கிடைத்த விமரிசனம் குறித்து வெங்கட் பிரபு வருத்தம்

கோவா படத்தில் திருங்கையாக நடித்த நடிகர் சம்பத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையென இயக்குநர் வெங்கட் பிரபு வருத்தம் தெரிவித்துள்ளார். 

DIN

கோவா படத்தில் திருங்கையாக நடித்த நடிகர் சம்பத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையென இயக்குநர் வெங்கட் பிரபு வருத்தம் தெரிவித்துள்ளார். 

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த வருடம் வெளியான  பாவக் கதைகள் என்ற இணையத் தொடர் விமரிசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் இடம் பெற்ற 4 படங்களை, 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர். 

அதில் 'தங்கம்' என்ற படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இந்தத் தொடரில் காளிதாஸ் ஜெயராம், ஷாந்தனு, ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் திருநங்கையாக சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

சமீபத்தில் ஒரு விருது விழாவில் இவரது நடிப்பைப் பாராட்டி, சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதனைப் பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, இப்பொழுது உள்ள விமரிசகர்கள் போல கோவா திரைப்படம் வெளியான போது இருந்திருக்க வேண்டும்.

'கோவா' படத்தில் நடித்ததற்காக சம்பத்துக்கு அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் யாராலும் பாராட்டப்படவில்லை. ஆனால் அவரது வேடத்துக்கு விமரிசகர்கள் ச்சீ என்று சொன்னார்கள். உங்களுக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி காளிதாஸ் ஜெயராம் என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை; ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி

மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

காலாண்டு விடுமுறை நிறைவு: பள்ளிகள் திறப்பு

திசை தெரியாமல் பயணிக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகம்!

மேற்கு வங்கத்தில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு! பலர் மாயம்

SCROLL FOR NEXT