நடிகை நிரஞ்சனி அகத்தியனை மணந்தார் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் தேசிங் பெரியசாமி (படங்கள்)
தேசிங் பெரியசாமி - நிரஞ்சனியின் திருமணம் புதுச்சேரியில் உள்ள...
பிரபல இயக்குநர் அகத்தியனின் இளைய மகளும் நடிகையுமான நிரஞ்சனியை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங் பெரியசாமி திருமணம் செய்துள்ளார்.
துல்கர் சல்மான், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன் நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கடந்த வருடம் பிப்ரவரி 28 அன்று வெளியானது. ரசிகர்களின் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தைப் பாராட்டிய ரஜினி, எனக்கும் ஒரு கதை தயார் செய்யுங்கள். நிஜமாகவே சொல்கிறேன். யோசித்து வையுங்கள் என்று தேசிங் பெரியசாமியிடம் போனில் கூறினார்.
நிரஞ்சனி நடித்த முதல் படம் - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இதற்கு முன்பு வாயை மூடி பேசவும், சிகரம் தொடு, காவியத் தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
Advertisement
இந்நிலையில் தேசிங் பெரியசாமி - நிரஞ்சனியின் திருமணம் புதுச்சேரியில் உள்ள ரிசார்டில் இன்று நடைபெற்றுள்ளது. இத்திருமணத்தில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றார்கள். திருமண நிகழ்வின் புகைப்படங்கள் ட்விட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.