பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- 5 பேர் கைது
சண்டீகரில் உள்ள பஞ்சாப் மாநில பாஜக தலைமையகத்துக்கு வெளியே நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
சண்டீகரில் உள்ள பஞ்சாப் மாநில பாஜக தலைமையகத்துக்கு வெளியே நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு கிரெனேட் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பலுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. போர்ச்சுகல் மற்றும் ஜெர்மனியில் உள்ள வெளிநாட்டு கையாட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்
Advertisement
சண்டீகரில் உள்ள பஞ்சாப் மாநில பாஜக தலைமையகத்துக்கு வெளியே புதன்கிழமை மாலை குண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் அலுவலகத்தைக் குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
குண்டு வெடித்துச் சிதறியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) அங்கு ஆய்வு நடத்தியதுடன், விசாரணையையும் முன்னெடுத்துள்ளனா். மத்திய தடயவியல் துறையினரும் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்துள்ளனா்.