செய்திகள்

கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த தமிழ் நடிகை

DIN

அருள்நிதியுடன் 'உதயன்', கார்த்தியுடன் 'சகுனி', சூர்யாவுடன் 'மாசு என்கிற மாசிலாமணி' போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. தமிழில் கடைசியாக அதர்வாவுடன் இணைந்து 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தில் நடித்திருந்தார். 

கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான படங்களில் பிரணிதா நடித்திருந்தார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் பிரணிதா தனது ஓராண்டு திருமண நாளைக் கொண்டாடினார். 

இந்த நிலையில் ''இதுவரை சந்திக்காத நபருடன் காதல் கொண்டுள்ளீர்களா ? நான் காதல் கொண்டுள்ளேன்'' என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரணிதா பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதை மறைமுகமாக இப்படி தெரிவிக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். 

இதன் ஒரு பகுதியாக மருத்துவ தகவல்களுடன் கூடிய புகைப்படங்களைப் பகிரந்து தான் கர்ப்பமாக இருப்பதை பிரணிதா உறுதிப்படுத்தியுள்ளார். அவரது பதிவில், ''என் கணவரின் 34வது பிறந்த நாளில் எங்களுக்கு கிடைத்த பரிசு'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT