அருள்நிதியுடன் 'உதயன்', கார்த்தியுடன் 'சகுனி', சூர்யாவுடன் 'மாசு என்கிற மாசிலாமணி' போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. தமிழில் கடைசியாக அதர்வாவுடன் இணைந்து 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தில் நடித்திருந்தார்.
கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான படங்களில் பிரணிதா நடித்திருந்தார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் பிரணிதா தனது ஓராண்டு திருமண நாளைக் கொண்டாடினார்.
இதையும் படிக்க | ''பிரேமம் இயக்குநர் சொன்ன கதையில் என் மகன் நடிக்க வேண்டும்...'': விஜய் பகிர்ந்த சுவாரசியத் தகவல்
இந்த நிலையில் ''இதுவரை சந்திக்காத நபருடன் காதல் கொண்டுள்ளீர்களா ? நான் காதல் கொண்டுள்ளேன்'' என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரணிதா பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதை மறைமுகமாக இப்படி தெரிவிக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதன் ஒரு பகுதியாக மருத்துவ தகவல்களுடன் கூடிய புகைப்படங்களைப் பகிரந்து தான் கர்ப்பமாக இருப்பதை பிரணிதா உறுதிப்படுத்தியுள்ளார். அவரது பதிவில், ''என் கணவரின் 34வது பிறந்த நாளில் எங்களுக்கு கிடைத்த பரிசு'' என்று குறிப்பிட்டுள்ளார்.