செய்திகள்

விரைவில் வெளியாகும் ’பொன்னியின் செல்வன்’ இரண்டாவது பாடல்

DIN

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.  அதைத் தொடர்து அப்படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. 

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் 2-வது பாடலை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளனர். இப்பாடல் வெள்ளிக்கிழமை (ஆக.19)  மாலை 6 மணிக்கு  வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரடக்‌ஷன்ஸ் தெரிவித்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘சோழா..சோழா’ என்கிற இப்பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT