செய்திகள்

காசேதான் கடவுளடா பாடல்: ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு விளக்கமளித்த நடிகை மஞ்சு வாரியர்

DIN

காசேதான் கடவுளடா பாடல் தொடர்பான ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு நடிகை மஞ்சு வாரியர் விளக்கமளித்துள்ளார். 

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

முதல் பாடல் வெளியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வைசாக் எழுதியுள்ள இரண்டாவது பாடலான ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகியுள்ளது. இதனை வைசாக், மஞ்சு வாரியர் இணைந்து பாடியுள்ளனர். ஆனால் இந்தப் பாடலில் மஞ்சு வாரியர் எங்கு பாடியிருக்கிறார் என்றே தெரியவில்லை என இணையதளங்களில் ரசிகர்கள் மீம்ஸ் பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு நடிகை மஞ்சு வாரியர் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காசேதான் கடவுளடா பாடலில் எனது குரல் கேட்கவில்லை என சொல்பவர்கள் கவனத்திற்கு. கவலைப்பட வேண்டாம். பாடலின் விடியோ வெர்ஷனுக்கான என்னுடைய குரல் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளது. அக்கறைக்கு நன்றி. வேடிக்கையான ட்ரோல்களை ரசித்தேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT