செய்திகள்

'நானே வருவேன்' பட பாடல்கள் குறித்து இயக்குநர் செல்வராகவன் தகவல்

நானே வருவேன் பட பாடல்கள் குறித்து இயக்குநர் செல்வராகவன் தகவல் பகிர்ந்துள்ளார். 

DIN

இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்து 'நானே வருவேன்' பட இசை குறித்து முக்கிய தகவலை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். 

அவரது பதிவில், ''நானே வருவேன் படத்தின் இசை பணிகள் நிறைவடைந்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். பாடல்களை விரைவில் வெளியிடுமாறு ரசிகர்கள் அவரிடம் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார். 

யுவன் இசையமைத்த 'வலிமை 'படத்துக்கு பின்னணி இசையை அவருக்கு பதிலாக ஜிப்ரான் அமைத்துள்ளார். மேலும் ராக்கி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் 'சாணிக் காயிதம்' படத்துக்கும் பாடல்களுக்கு மட்டுமே யுவன் இசையமைக்கிறார்.

படத்தின் பின்னணி இசையை சாம் சிஎஸ் கவனிக்கிறார். இதனால் யுவன் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் நானே வருவேன் பாடல்கள் யுவனை மீண்டும் முன்னணி இசையமைப்பாளராக மாற்றும் என்று ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

SCROLL FOR NEXT