செய்திகள்

தாத்தாவின் ஊருக்கு சென்ற கண்ணதாசனின் பேரன்: புகைப்படங்களைப் பகிர்ந்து உருக்கம்

கண்ணதாசனின் பேரன்  தாத்தாவின் பிறந்த ஊருக்கு சென்றுள்ளார்.  

DIN

கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கண்ணதாசனின் மகன் கலைவாணனுடைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கண்ணதாசனின் பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுகூடல்பட்டிக்கு சென்றுள்ளார். 

அங்கு பேருந்து நிறுத்தம், அங்கு நிறுவப்பட்டுள்ள கண்ணதாசன் சிலை உள்ளிட்டவைகளை புகைப்படம் எடுத்து ஆதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் எழுதியுள்ள பதிவில், தான் வந்த பாதை எதுவென்று அறிந்தவன் அவன் செல்லும் பாதை சரியா தவறா என்பதையும் அறிவான் என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆதவ் கண்ணதாசன் பொன்மாலைப் பொழுது படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பரத்துடன் அவர் இணைந்து நடித்த காளிதாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தாழ் திறவாய் என்ற படத்தில் நடித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் வசதிகள் தொடங்கிவைப்பு

கண்ணழகு... திரிஷ்யா!

ரூ.17,884.76 கோடி இழப்பை சந்தித்த இண்டிகோ நிறுவன பங்குகள்!

மயக்கும் மான்விழி அம்புகள்... மௌனி ராய்!

பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் விதிப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

SCROLL FOR NEXT