செய்திகள்

சமந்தா, தனுஷைத் தொடர்ந்து விவாகரத்து செய்யவிருக்கும் பிரபல நடிகை

நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

DIN

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இவரது விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ராஜ் குந்த்ராவிற்கும் ஷில்பா ஷெட்டிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி இருவரும் தெரிவிக்கவில்லை. 

நடிகை ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபு தேவாவுடன் இணைந்து மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்திருந்தார். மேலும் குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். ராஜ் குந்த்ராவிற்கும் ஷில்பா ஷெட்டிக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

முன்னதாக சமந்தா, தனுஷ், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோரின் விவகாரத்து செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT