பொங்கலுக்கு தெலுங்கில் மட்டும் வெளியாகும் கார்த்தி படம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் மட்டும் கார்த்தியின் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக்கு தமிழுக்கு நிகராக தெலுங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருவரது படங்களும் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் சங்கராந்திக்கு கார்த்தியின் படம் தெலுங்கில் மட்டும் வெளியாகவுள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. கார்த்தியின் படமான 'நான் மகான் அல்ல' திரைப்படம் தெலுங்கில் 'நா பேரு சிவா' என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.
இதையும் படிக்க | பிக் பாஸிலிருந்து பணப் பெட்டியுடன் வெளியேறுகிறாரா அமீர்?
Advertisement
Advertisement
பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' படத்தை தெலுங்கில் 'நா பேரு சிவா 2' என்ற பெயரில் வெளியிடவுள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சங்கராந்திக்கு கரோனா பரவல் காரணமாக எந்தப் பெரிய படங்களும் வெளியாகாததால் நா பேரு சிவா 2 நல்ல வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.