முகப்பு
செய்திகள்

தனது உடல்நிலை குறித்து நடிகை த்ரிஷா புதிய தகவல்

கரோனா பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தான் முற்றிலும் குணமானதாக த்ரிஷா அறிவித்துள்ளார். 

Updated On : 12 ஜனவரி, 2022 at 12:48 PM
பகிர்:

நடிகை த்ரிஷா தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவி வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அதற்காக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் த்ரிஷா அறிவித்திருந்தார். இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

இதனையடுத்து அவர் தான் முற்றிலும் குணமாகிவிட்டதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்தப் பதவில், ''இதற்கு முன் நெகட்டிவ் என்ற வார்த்தையை படித்து இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது இல்லை. உங்கள் வேண்டுதல்களுக்கும் அன்புக்கும் நன்றி. 2022 ஆம் ஆண்டே நான் தயார்'' என்று தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.