செய்திகள்

கரோனாவுக்கு பிறகு நடிகர் வடிவேலு எப்படி இருக்கிறார்?: வெளியான புகைப்படம்

நடிகர் வடிவேலு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் வடிவேலு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. 

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் லண்டன் சென்றிருந்தனர்.

ஒமைக்ரான் அதிகம் பரவி வரும் லண்டனிலிருந்து திரும்பியதால் வடிவேலுவிற்கு விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கடந்த மாதம் 24ஆம் தேதி அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்ட அவர், கடந்த 2ஆம் தேதி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு செல்லத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், அவருடன் சின்னத்திரை நடிகர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கரோனாவிலிருந்து குணமடைந்த பிறகு அவர் எடுத்துக்கொண்டதாக வெளியான முதல் புகைப்படம் இது என்பதால், இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT