செய்திகள்

'அவன் இல்லை...' எஸ்.பி.பி நிகழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுத இளையராஜா

DIN

விஜய் டிவி வெளியிட்டுள்ள எஸ்பிபி 75 நிகழ்ச்சியின் ப்ரமோ  ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 3 ஆம் தேதி எஸ்பிபி 75 என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், பிரசாந்த், வைரமுத்து ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். 

இந்த நிகழ்ச்சி வருகிற ஜூன் 19 ஆம் தேதி ஞாயிறு மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அதற்கான முன்னோட்டத்தை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் இளையராஜா மேடையில் இளைமை எனும் பூங்காற்று என்ற பாடலை கண் கலங்கியபடி பாடினார். பின்னர் மேடையை விட்டு இறங்கியதும் அவர் கண்களில் கண்ணீர் வடிந்தது. 

இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மேடையேறிய ரஹ்மான் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலைப் பாடினார். இந்த நிகழ்ச்சியை வெங்கட் பிரபு தொகுத்து வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT