செய்திகள்

5 வருடங்களுக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கும் பாவனா

DIN

ஐந்து வருடங்களுக்குப் பிறகு பாவனா நடிக்கும் மலையாளப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பாவனா. கன்னட தயாரிப்பாளர் நவீனை 2018 ஜனவரியில் திருமணம் செய்துகொண்டார். 2017-ல் கடைசியாக ஏடம் ஜுவான் என்கிற மலையாளப் படத்தில் நடித்தார். இதன்பிறகு சமீபகாலமாக கன்னடப் படங்களில் மட்டுமே  அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாவனா மலையாளப் படங்களில் மீண்டும் நடிக்கவேண்டும் என மலையாள ரசிகர்களும் திரையுலகினரும் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து 5 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாளப் படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார் பாவனா.

Ntikkakkakkoru Premondarnn என்கிற மலையாளப் படத்தில் பாவனா நடிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாவனா, ஷரஃபுதீன் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் அதில் அஷ்ரஃப் இயக்குகிறார். இசை - பால் மேத்யூஸ். இப்படத்தின் போஸ்டரைப் பிரபல நடிகர் மம்மூட்டி வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT