செய்திகள்

'ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.500 கோடி': மோசடி நபரிடம் கோடிக்கணக்கில் ஏமாந்த தமிழ் நடிகர்

DIN

'கிழக்கு சீமையிலே', 'பசும்பொன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விக்னேஷ். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான 'பூவே உனக்காக' தொடரிலும் நடித்திருந்தார். 

தற்போது சென்னையில் சொந்த தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது தொழில் மூலமாக பழக்கமான ராம் பிரபு என்பவர், ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் இரிடியம் விற்பனை செய்துள்ளதாக அவரிடம் கூறியுள்ளார். 

மேலும் தன்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.500 கோடி லாபம் கிடைக்கும் என்று நடிகர் விக்னேஷிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பி ரூ.1.82 கோடியை கொடுத்துள்ளார். நடிகர் விக்னேஷின் நண்பர்களும் ராம் பிரபுவிடம் சில லட்சங்களை கொடுத்துள்ளனர். 

பின்னர் ராம் பிரபுவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே விசாரித்தபோது, ஏற்கனவே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விக்னேஷ் தனது பணத்தை மீட்டு தருமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT