செய்திகள்

'ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.500 கோடி': மோசடி நபரிடம் கோடிக்கணக்கில் ஏமாந்த தமிழ் நடிகர்

மோசடி கும்பலிடம் பிரபல தமிழ் நடிகர் கோடிக்கணக்கில் ஏமாந்துள்ளார். 

DIN

'கிழக்கு சீமையிலே', 'பசும்பொன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விக்னேஷ். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான 'பூவே உனக்காக' தொடரிலும் நடித்திருந்தார். 

தற்போது சென்னையில் சொந்த தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது தொழில் மூலமாக பழக்கமான ராம் பிரபு என்பவர், ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் இரிடியம் விற்பனை செய்துள்ளதாக அவரிடம் கூறியுள்ளார். 

மேலும் தன்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.500 கோடி லாபம் கிடைக்கும் என்று நடிகர் விக்னேஷிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பி ரூ.1.82 கோடியை கொடுத்துள்ளார். நடிகர் விக்னேஷின் நண்பர்களும் ராம் பிரபுவிடம் சில லட்சங்களை கொடுத்துள்ளனர். 

பின்னர் ராம் பிரபுவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே விசாரித்தபோது, ஏற்கனவே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விக்னேஷ் தனது பணத்தை மீட்டு தருமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT