செய்திகள்

உலக அளவில் முதல் நாளில் 'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு கிடைத்த வசூல்: மிரண்டுபோன ரசிகர்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

DIN

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இந்தப் படம் பாகுபலியின் வசூலை முறியடிக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் படக்குழு வெளியிட்ட தகவல் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. உலக அளவில் இந்தப் படம் ரூ.223 கோடி வசூலித்துள்ளதாம்.இந்திய அளவில் இந்தப் படம் ரூ.156 கோடி வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதன் மூலம் இந்திய சினிமாவுக்கு அதிக பட்ச முதல் நாள் வசூல் விவரங்கள் கொண்ட பட்டியிலில் 'ஆர்ஆர்ஆர்' முதலிடத்தை பிடித்துள்ளது. முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் முதலிடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படம் கொமரம் பீம், சீத்தாராம ராஜு என இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை கற்பனை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

SCROLL FOR NEXT