செய்திகள்

’நிச்சயிக்கப்பட்ட திருமணம் சரி வராது..’: நடிகர் அசோக் செல்வன்

DIN

நடிகர் அசோக் செல்வன் திருமணம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘தெகிடி’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் அசோக் செல்வன். அதன்பின் ’மன்மத லீலை’ ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட காதல் படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்துடன் இயங்கி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக தோல்வியை தவிர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பங்கேற்ற அசோக் செல்வனிடம் அவரின் திருமணம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘திருமணம் நடக்கும்போது நடக்கும். அடுத்தாண்டு நடந்தாலும் நடக்கலாம். இப்போது, சினிமாவைத்தான் காதலிக்கிறேன். தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் சரிப்பட்டு வராது’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT