செய்திகள்

வடிவேலு குரலில் வெளியானது ‘அப்பத்தா’ பாடல்! 

DIN

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு குரலில் முதல் பாடலாக ‘அப்பத்தா’ பாடல் விடியோ வெளியானது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு  வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைக்கா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

ஏற்கெனவே இந்த படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியானது. 

‘அப்பத்தா’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை வடிவேலு பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலுக்கு பிரபுதேவா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT