முகப்பு
செய்திகள்

ஓடிடியில் வெளியானது ‘காந்தாரா’

காந்தாரா திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:56 AM
பகிர்:

காந்தாரா திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.

தொன்மங்களையும் அதிரடியான சண்டைக் காட்சிகளையும் இணைத்து நல்ல திரைப்படமாக ரிஷப் ஷெட்டி மாற்றியிருக்கிறார்.

கன்னட  வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரூ.16 கோடியில் தயாரான இப்படம் இதுவரை வெளியான அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காந்தாரா திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியானது.

முழு கட்டுரையைப் படிக்க →