செய்திகள்

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு!

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததாக பிரபல நடிகர் ஜி.எம். சுந்தர் தெரிவித்துள்ளார்.

DIN

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததாக பிரபல நடிகர் ஜி.எம். சுந்தர் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், துணிவு படத்தின் டப்பிங் பணிகள் இனிதே முடிவடைந்ததாக நடிகர் ஜி.எம். சுந்தர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துணிவு படம் குறித்த தொடர்ச்சியான அப்டேட் வந்து கொண்டிருப்பதால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT