செய்திகள்

வசூலில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ள பொன்னியின் செல்வன்!

தமிழ்நாட்டில் ஆறு நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டி சாதனை செய்துள்ளது பொன்னியின் செல்வன் படம். 

DIN

தமிழ்நாட்டில் ஆறு நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டி சாதனை செய்துள்ளது பொன்னியின் செல்வன் படம். 

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது. 

பொன்னியின் செல்வன் படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை அள்ளியிருக்கிறது. தமிழ்த் திரையுலகில் மிக வேகமாக (ஆறு நாள்களில்) ரூ. 100 கோடி வசூலைப் பெற்ற படம் என மெட்ராஸ் டாக்கீஸ் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

பாண்டிராஜ் - ஹரிஷ் கல்யாண் கூட்டணியில் புதிய படம்?

மலர்களிலே அவள் மல்லிகை... அன்ஸ்வரா ராஜன்!

பிரதிகா ராவலுக்கு பதக்கம் இல்லை! விவாதப் பொருளான ஐசிசியின் செயல்.. கொந்தளித்த ரசிகர்கள்!

ராகுல் காந்தி எப்போதும் உண்மையையே பேசுவார்: பிரியங்கா

SCROLL FOR NEXT