செய்திகள்

ரூ.75-க்கு சினிமா டிக்கெட்: தேதியை மாற்றியது மல்டிபிளக்ஸ் கூட்டமைப்பு

DIN

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.75 -க்கு டிக்கெட் விற்கப்பட இருந்த தேசிய சினிமா தினத்தின் தேதியை மாற்ற உள்ளதாக மல்டிபிளக்ஸ் கூட்டமைப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி தேசிய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் தேசிய சினிமா தினமான செப்டம்பர் 16-ல் மட்டும் அனைத்து வகையான இருக்கைகளுக்கும் டிக்கெட் விலை ரூ.75 என அறிவித்திருந்ததது.

அந்த நாளில் மட்டும் நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளில் டிக்கெட் கட்டணமாக ரூ. 75 மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இந்த முன்னெடுப்பில் பங்கேற்கின்றன எனத்  தெரிவித்திருந்தனர்.

சாதாரண திரையரங்க உரிமையாளர்கள் இந்தச் சலுகையை வழங்க முன்வரவில்லை.

இந்நிலையில், செப்.16 அன்று அறிவிக்கப்பட்டிருந்த ரூ.75-க்கு டிக்கெட் சலுகையை செப்.23 ஆம் தேதிக்கு மாற்றம் செய்துள்ளதாக மல்டிபிளக்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் கடந்த வாரம் வெளியான பிரம்மாஸ்திரம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாலும்  ’வெந்து தணிந்தது காடு’ வருகிற வியாழக்கிழமை வெளியாவதாலும் புதிய படங்களின் வசூலில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்தத் தேதி மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT