செய்திகள்

''இது தனுஷ் ஆண்டு'': தொடர் அறிவிப்புகளால் உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. தொடர்ச்சியாக தனுஷின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வந்த நிலையில், திரையரங்கில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். 

இதன் காரணமாக படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. வருகிற 23 ஆம் தேதி இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' படம் இந்த மாத இறுதியில் திரைக்குவரவிருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ளதால் 'நானே வருவேன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் வாத்தி படம் இந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி திரைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கிவருகிறார்.  ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இதற்கிடையே கேப்டன் மில்லர் படத்துக்காகவும் தனுஷ் தற்போது தயாராகிவருகிறார். இதுகுறித்து புதிய தோற்றத்தில் தனுஷ் இருக்கும் படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அடுத்தடுத்து தனுஷ் பட அப்டேட்டுகள் வெளியாகி வருவதால் இது தனுஷ் ஆண்டு என அவரது ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT