செய்திகள்

மீண்டும் ஷாருக்கானை இயக்குவீர்களா?: மணிரத்னம் விளக்கம்

நடிகர் ஷாருக்கானை மீண்டும் இயக்குவீர்களா என்கிற கேள்விக்கு இயக்குநர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

DIN

நடிகர் ஷாருக்கானை மீண்டும் இயக்குவீர்களா என்கிற கேள்விக்கு இயக்குநர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

நாளை (செப்.30) ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இறுதி புரோமோஷன் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் மணிரத்னம் கலந்துகொண்டார்.

அப்போது,  மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘தில் சே’(உயிரே) திரைப்படத்தைக் குறிப்பிட்டு மீண்டும் ஷாருக்கானை வைத்து படம் எடுப்பீர்களா? என மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

உயிரே படப்பிடிப்பில்...

அதற்கு அவர் ‘என்னைப் பொருத்தவரை நல்ல கதையை வைத்தே நடிகர்களை முடிவு செய்வேன். நடிகர்களை மனதில் வைத்து கதை எழுத மாட்டேன். ஷாருக்கானுக்கு ஏற்ற கதை அமைந்தால் அவருடன் பணியாற்றுவேன்’ எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT