முகப்பு
செய்திகள்

ஹிந்தி வேண்டாம்; தமிழில் பேசுங்க: மனைவியிடம் கூறிய ஏ.ஆர்.ரகுமான்

சென்னையில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவியிடம் ஹிந்தியில் பேச வேண்டாம் என மேடையில் கூறிய காணொலி வைரலாகி வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
பகிர்:

சென்னையில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவியிடம் ஹிந்தியில் பேச வேண்டாம் என மேடையில் கூறிய காணொலி வைரலாகி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சைரா பானுவுடன் கலந்து கொண்டார்.

இந்த விழாவில், மேடைக்கு வந்த ஏ.ஆர்.ரகுமானிடம் பேசிக் கொண்டிருந்த தொகுப்பாளர்கள், அவரது மனைவியையும் மேடைக்கு அழைத்தனர்.

அப்போது, தனது குரலை மனைவி விரும்புவதாகவும் அதனால் மீண்டும் மீண்டும் தனது பேட்டிகளை கேட்டுக் கொண்டிருப்பார் என்று ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார்.

தொடர்ந்து, அவரது மனைவி சைரா பானு பேச மைக்கை எடுத்தபோது, ஹிந்தில பேசாதிங்க, தயவுசெய்து தமிழில் பேசுங்க என சிரித்தபடி தெரிவிக்க, அரங்கில் இருந்தவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்யத் தொடங்கினர்.

சைரா பானு பேசுகையில், எனக்கு தமிழ் சரளமாக பேச வராது. மன்னித்து விடுங்கள். நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். இவரது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →