தள்ளிப்போகும் விடாமுயற்சி படப்பிடிப்பு!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாக உள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
அதன்படி, அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைத்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இதையும் படிக்க | வெளியானது ஜென்டில் மேன் - 2 அறிவிப்பு விடியோ!
முன்னதாக, இப்படத்தின் படப்பிடிப்பு புணேவில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, ஆகஸ்ட் மாத துவக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், மீண்டும் படப்பிடிப்பு செப்டம்பர் முதல்வாரத்தில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, படப்பிடிப்பு தள்ளிப்போவதால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.