நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் வெளியான ஒரு வாரத்தில் உலகளவில் ரூ.375 கோடி வசூலித்துள்ளது. அடுத்ததாக, ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: சந்திரமுகி - 2 படத்தில் 10 பாடல்கள்!
ஆனால், ரஜினி இமயமலைப் பயணத்தில் இருப்பதால் அவர் சென்னை திரும்பியதும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்திற்கு ‘வேட்டை’ எனப் பெயரிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.