முகப்பு
செய்திகள்

தனுஷ் 50: ஒரே கட்டமாக நடைபெறும் படப்பிடிப்பு!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ‘தனுஷ் - 50’ படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று முடிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகள்

தனுஷ் 50: ஒரே கட்டமாக நடைபெறும் படப்பிடிப்பு!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ‘தனுஷ் - 50’ படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று முடிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
பகிர்:

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிச.15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும் முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ராயர் என்கிற தலைப்பில்(தகவல்) உருவாகவுள்ள இப்படத்தில் தனுஷ் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதற்காக, சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், ஒரே கட்டமாக இப்படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் வருகிற அக்டோபர் மாதத்தில் மொத்த படப்படிப்பும் நிறைவடையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →