முகப்பு
செய்திகள்

மிக்ஜம் புயல் பாதிப்பு: இயக்குநர் அமீர் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கல்

மிகஜம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் இயக்குநரும் நடிகருமான அமீர் வழங்கினார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:27 PM
பகிர்:

மிகஜம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் இயக்குநரும் நடிகருமான அமீர் வழங்கினார்.

மிக்ஜம்  புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார். 

அதன்படி பல்வேறு கட்சிகளின் சார்பிலும் மேலும் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நிதி வழங்கி வருகின்றனர். மேலும் தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் பலரும் புயல் மீட்புப் பணிகளுக்காக நிதி அளித்து வருகின்றனர்.  

அந்தவகையில், மிகஜம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் இயக்குநரும் நடிகருமான அமீர் இன்று வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.