நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: தனுஷ் இயக்கும் 3வது படத்தின் தலைப்பு
நடிகர் தனுஷ் தான் இயக்கும் 3வது படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என தலைப்பு வைத்துள்ளார்.
செய்திகள்நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: தனுஷ் இயக்கும் 3வது படத்தின் தலைப்பு
நடிகர் தனுஷ் தான் இயக்கும் 3வது படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என தலைப்பு வைத்துள்ளார்.
நடிகர் தனுஷ் தான் இயக்கும் 3வது படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என தலைப்பு வைத்துள்ளார்.
கோலிவுட்டில் நடிப்பு, தயாரிப்பு, இயக்குநர் என பிஸியாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது அவர் தனது 50வது படத்தை அவரே இயக்கி நடித்து முடிதுதுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தைத் தொடர்ந்து மற்றுமொரு படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார். ஆனால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை.
தன்னுடைய அக்கா மகனை நாயகனாக்கி படத்தை இயக்கி வருகிறார். படத்தில் கௌரவ தோற்றத்தில் மட்டும் தனுஷ் நடிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் தலைப்பை விடியோ ஒன்றினை வெளியிட்டு நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
அதில் படத்தின் தலைப்பாக “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற பழைய பாடல் வரி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ‘வழக்கமான காதல் கதை’ என்று சப் டைட்டிலாகவும் வைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில் டீனேஜ் பருவ காதலை மையமாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.